பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


4. சோழன் நல்லுருத்திரன்

உருத்திரன் என்பது சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களில் ஒன்று. அப்பெயர் இவ்வரசர்க்குச் சூட்டி வழங்கப்பட்டது. குண விசேடம் இம்மன்னர் பால் அமைந்திருந்த காரணத்தால் நல் உருத்திரன் என்று தம் பெயர்க்கு முன் சார்த்திக் கூறப்பட்டு வந்துள்ளார். இவர் சோழ மன்னர் மரபினர் என்பதை, இவர் திருப்பெயர் முன்னர் சோழன் என்ற குடிப்பெயர் அமைந்து குறித்துக் கொண்டிருப்பதல்லை நன்கு உணரலாம்.

இவ்வரச மகனார் சோழன் நல்லுத்தரன் எனவும், குடிப்பெயர் குறிக்கப்படாமல் நல்லுத்திரன் எனவும் வழங்கப்பட்டுள்ளார். இவர்பால் உலக மக்கள் சோம்பி இருத்தல் குறித்து அவர்களை வெறுக்கும் இயல்பு அமைந் திருந்தது. ஊக்கமுடைய மக்களை உவந்து வந்தனர். சோம்பலுடைய மக்களை வெறுத்து ஒதுக்கி வந்தனர். இந்தவாறன பண்பு இவர் பால் இருந்திருக்குமானல், இவர் ஊக்கம்உடையவராய் இருந்திருப்பார் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? இவர் ஊக்கமுடையவர் பால் விருப்பும், அஃது இல்லவர்பால் வெறுப்பும் கொண்டவர் என்பதை இவர் பாடியுள்ள புறநானூற்றுச் செய்யுள் நமக்கு நன்கு புலப் படுத்துகின்றது. அப்பாடலால் இவர் எத்