59
11. ஒல்லையூர் தந்த
பூதப் பாண்டியன்
இங்கு இதுபோது கூறப்படும் புலவர் பாண்டிய மரபினர் என்பது இவரது பெயரில் ஈற்றில் உள்ள சொல்லாகிய பாண்டியன் என்பதனால் நன்கு தெரிய வருகிறது. இவர் வெறும் பாண்டியன் என்று அழைக்கப் பெறாமல் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டமைக்குக் காரணம், புதுக்கோட்டையைச் சார்ந்த ஒல்லையூர் என்னும் ஊரை வென்று தம்மடிப்படுத்தி அரசு புரிந்தமையே ஆகும். ஒல்லையூர் என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள ஒலிய மங்கலம் என்னும் ஊரிலுள்ள சாஸனத்தால் அவ்வூரைச் சார்ந்தது என்பது தெரியவருகிறது. தென்னாட்டில் உள்ள பூதப் பாண்டி என்னும் ஊர் இவர் பெயரால் அமைக்கப்பட்டது என்ற காரணத்தால் பூதப் பாண்டியன் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இவர் செய்யுள் செய்வதிலும் வல்லவர். போரிடுவதிலும் வல்லவர். இவர் செய்யுள் செய்வதில் வல்லவர் என்பதை இவரது பாடல்கள் புறநானூற்றில் மூன்றும் அகநானூற்றில் நான்கும் ஆக ஏழு செய்யுட்கள் இருப்பதினின்று உணரப்படுகிறது. இவரது வீரத்திற்குச் சான்று ஒல்லையூர் என்னும் ஊரை அகப்படுத்தித் தம் நாட்
2637–5