பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

'கேவ லம்,ஒரு குருட னெனப்பிறர்
கேலி செய்வது மிகமிகப்
பாவம்! அவன்வழி முழுவதும்உயிர்
பதற நெருடித் தவிக்கிறான்!

எண்ணிச் செல்லு மிடத்தை யினியவள்
இடறு றாதுசென் றெய்திடக்
கண்ணு ளோரெவ ரேனு மொருதடி
கையில் கொடுத்துத வுங்களே!

98