பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்



மாண்பு

'மனம்போன்று மாண்பெனு' மென்சொலை நீயும்
மறவாமல் நெஞ்சினில் கொள்ளடா!
இனம்போன் றிருப்பவரின்சொல் - 'ஏற்றம்
இல்லை' யென் சொல்லித் தள்ளடா!

அயர்வும் மயக்கமும் நீக்கடா - நாளும்
ஆற்றலறிவினைத் தேக்கடா!
உயிரிலே வுயிரென் வுக்கடா - உன்னை
யுண்மை மனிதனா யாக்கடா!

நினைவு முழுவதும் நேர்மையில் - நிற்க
நினைத்து நினைத்துப் பழகடா!
மனதை யுயர்த்து மளவிலே - மண்ணில்
மாந்த ருயர்வென் றொழுகடா!

தேடக் கிடைக்காத சொத்தடா மாண்பே
தேசத்தைக் காத்திடும் சித்தடா !
நாடும் புலமையின் சத்தடா - நாளும்
நன்மை விளைக்கின்ற வித்தடா!

இன்னல்க ளுன்னை யெதிர்க்கினும் - எஞ்சா
தேற்றத்தை யேஎன்று மெண்ணடா!
சின்னஞ் சிறியதே னியெனச் - சேர்ந்து
சிறந்த செயல்களைப் பண்ணடா!

99