பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

முகவுரை

சத்தியத்தின் பாதை என்னவோ மிகக் கடினமானது தான். ஆயினும் கவிஞன் அதைக் கடந்து செல்லத் தயங்குவதில்லை. பொய்மை எனும் இருட்டு அவனின் எழுத்து என்னும் இதயத்தைக் கொன்றுவிடும். ஆதலால் தான் அவன் சத்தியம் என்னும் விளக்கை உடன் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

'தென்றலிலே நிலவுகலந் திடுத லொப்போ?
திருக்குறளில் வாழ்வுகலந் திடுத லொப்போ?
மன்றலிலே முல்லைகலந் திடுத லொப்போ?
மதுரவிசை தமிழில்கலந் திடுத லொப்போ?'

கவிஞன் ஒப்பு நோக்குகிறான் தீர்மானிக்க முடியாமல் -

நாட்டினிலே ஊரூராய் திரியும் துன்பம்
நல்லவர்கள் யாரெனவே தேடும் துன்பம்
ஏட்டினிலே பொருளுணர்ந்து தேர்ச்சி யெய்ய
இரவினிலே கண்விழித்து கற்கும் துன்பம்
வீட்டினிலே மூட்டை யெனும் பூச்சியாலே
விளைகின்ற துன்பத்துக் கிணை யாகாதே!

உலகில் கவிஞனுக்குள்ள எத்தனையோ துன்பங்களில் இது மிகப் பெரும் துன்பமாக

வெறும் கற்பனை என்பது காகிதப் பூக்களாக, அழகுள்ளதாக, மனம் கவர்வதாக இருக்கலாம். ஆனால், அனுபவம் என்னும் உண்மையால் மூட்டைப் பூச்சியின் கடியை கூட உயிரோட்டமாக கவிதையில் கூற முடிகிறது.

9