பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

விவசாயம்

மணஞ்செய்த மறுவருடம் தனிலி ருந்தே
மாதரசி தாரா.மல் கட்ட லானாள்
'பணம்செய்து கொண்டுவரா விடா லென்னால்
படைக்கமுடி யாதுணவு பாங்கா' யென்றே.

'புளி காரம் போடாம லுப்பைப் போட்டுப்
புது விதமாய்ச் சமைத்திட்டால் போது மெனறேன
'பழிகார ரிதையறிந்தால், நம்மைப் பற்றிப்
பார்முழுதும் பரப்பிடுவாரிழிவை' யென்றாள்.

'நாம்நமக்காய் வாழுவதே யன்றி மற்றிந்
நாட்டார்க்காய் வாழல் நல மாகா தென்றேன்.
போம்நுமக்குப் பொழுதுபோ காவிட்டால்நும்
புதுவிதத்தைப் பொறுக்கியெடுத் துக்கொண்' டென்றாள்.

'உள்ளதனை வைத்துக்கொண் டுண்மை யாக
உலகத்தில் வாழ்வதுதா னுசித மென்றேன்
'பள்ளியிலே படித்துவந்த பாடத் தாலே
பசிருசிதா னொருபோதும் படியா' தென்றாள்.

என்னசொன்ன போதும்துளி காதில் வாங்கா
தெதிர்த்தெதிர்த்துப் பேசுவதை யெதிர்த்து நானும்
கன்னத்தி லொப்புக்கோரடிகொ டுத்தேன்;
கண்ணையவள் கைகளினால் கசக்கிக்கொண்டே.

'என்னென்ன படவேண்டு மென்றத் தெய்வம்
என்தலையி லெழுதியதோ அறியே'னென்று
பன்னியழத் தொடங்கிவிட்டா லதனைக் கண்டு
பாகாக வருகிற்றன் றெனது நெஞ்சும்!

109