பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்



ஆயிரம்நூல் கற்றாலு மென்னே பெண்ணே!
அதிபதியாய் வாழ்ந்தாலு மென்னே, பெண்ணே!
நேயப் பெண் கண்ணிரைக் கண்டு, நெஞ்சம்
நிலைகுலையா ஆண்மகனெங் கேனு முண்டோ?

'பெண்மையே வெற்றிபெறு' மென்று முன்னோர்
பேசினது பன்முறைநான் கேட்ட துண்டு:
உண்மையாய் நேரிலதைக் கண்டேன்; காண
உடைந்ததுள மொழுகிற்றென் கொள்கை யெல்லாம்!

பரிவான குரலிலிது பகர்ந்தேன்; பெண்ணே!
பண்டையவன் னடிக்கடனைத் தீர்த்தே னேனும்,
இரவான வாழ்விதனை வேண்டே னீயாய்
எகுகிறேன் பொருள்தேட இனிநா னென்றே.

எனதுமறு மொழியால்தன் னிதயந் தன்னில்
இன்பமிகுத் திருப்பதனை யியம்பா ளாகித்
தனதருமைக் கன்னத்தைத் தடவி னாளாய்த்
'தகாத செயல் செய்தீர்நீ ரன்றோ! இன்று!

எத்தனையோ நாள்தவம்நான் செய்து பெற்ற
வெழிலார்ந்த கனியெனவே இனிக்க, நீங்கள்
முத்தமிடும் கன்னத்தி லடித்து, நோவை
மூட்டிவிட்டீ ரிதைமறக்க முடியா' தென்றாள்.

வார்த்தையிலே சினம் நிறைந்து வடிந்த
தேனும் வடிவழகி யவள் முகத்தை வலிந்து கூர்ந்து
பார்த்ததிலே எனைப்பகடி பண்ணல் போலட்
பட்டதனால் கலகலென நகைத்தே னன்றே!

110