பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்



மனமாற்றம்

எட்டடித்து நிமிடமிரு பதுவு மாயிற்
றின்னும்மோர்க் காரிவர வில்லை; நேற்றே
வெட்டொன்று துண்டிரண்டாய்க் காசு கேட்டாள்.
வெகுளாது. 'பொறுத்தி'டென வேண்டிக் கொண்டேன்;
பட்டணத்தில் கைதனிலே பைசா யின்றிப்
படுந்துயர மெடுத்துரைக்கப் படுவதன்றே!
ஒட்டுமொத்தம் பட்டினிதா னொருநாள் பூரா!
உடல்வற்றி வுருக்குலைந்தா ரெனது மக்கள்!

'எப்போது மூலஇயல்புக் கேற்கா நூல்கள்
எழுதுவதுங்கற்பதுவு மியல்பா யிற்று!
அப்பப்போததிசயமா யைந்தும் பத்தும்
அனுப்புகிறார் யார்யாரோ அதுவு மன்றி
ஒப்புக்கென் னப்பாவு முதவு கின்றார்
உலகத்தின் மெச்சுதலுக்குள்ள மின்றி,
எப்போது தானிதற்கோர் விடிவு காலம்
ஏற்படுமோ என்றலுத்துக் கொண்டாள், தாரா!

கோபமெனக் குத்தாங்கக்கூட வில்லை:
குணங் குறைத்துக் கொள்வதற்கும் துணிய வில்லை!
பாபுபடும் பசியிசிவைப் பரிந்து பார்த்துப்
பரிதபித்துக் கொள்வதிலும் பயனொன்றில்லை!
'ஆபத்துச் சமயத்தில் பாப மில்லை!
அம்மணியே அட்டாயிற் றைமது வீட்டில்;
தீபத்துக் கெண்ணெயெனச் சோற்றை யூட்டித்
தேற்றிடுக, சிறுவனை நீ யென்றாள் செல்லம்!

111