பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

'குடியடி யோடு குன்றிக்
குலைந்தது போலச் சீவன்
நடுங்கிட வோடி வந்து
நவின்றது மிதற்குத் தானா?
கிடக்குதின் றொருநாள் தானே
குடித்தது சரி, போ!" வென்றேன்
மடமட வெனவே மேலும்
மலர்த்தினா ளவள்தன் வாயை!

கரும்பூனை காலை மாலை
கட்டாயம் வந்து திரும்! ஒ
ரு நாளா! இரண்டு நாளா?
ஒன்றரை மாத காலம்!
வரும்போது பார்த்து நானும்
வைததை விரட்டி வைப்பேன்;
இருப்பினும் வந்தின் றந்தோ!
யேய்த்தெனை வென்ற' தென்றாள்.

ஒன்றரை மாத காலம்
ஓயாமல் விரட்டி வைதும்
நின்றபா டின்றிப் பூனை
நிலையாக முயன்ற தாலே,
இன்றதற் கிணையில் லாத
வெற்றியாய் விட்ட தன்றோ?
நன்றது! நானும் பூனை
நடப்பைமேற் கொள்ளவே னென்றே.

116