பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

நாட்டினிலே ஊர்தோறும் நடந்து சென்று
நல்லவர்யா ரெனநாடிக் காணும் துன்பம்:
ஏட்டினிலே மாணவர்கள் தேர்ச்சி யெய்த
இரவினிலே உறக்கமறக் கற்கும் துன்பம்:
ஒட்டினிலே இருந்துண்டிங் கொவ்வோர் நாளும்
உயிர்பேணத் திரியுமிர வலர்கள் துன்பம்;
வீட்டினிலே மூட்டை கொசு விருந்துக் காளாய்
விளைகின்ற துன்பத்துக் கிணையா காதே!

119