பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

இரவின் சிறிய நாழிகைக ளின்றும்
எரியொத்து வெந்து படினும் - வரையில்
பனியொத் துறைந்து, பளிங்கொத் திறுக்கி
எனைவார்த் தெடுக்கு மினிது!

கொங்குலவுங் குன்றைக் குலவிக் கவினுலவச்
சங்குலவிச் செல்லும் தடங்கரையை - யிங்கிருந்
தென்னே டெடுத்துக் கொண்டேகவே யேங்குகிறேன்
முன்னோடி யாகி முனைந்து.

எடுத்துக்கொண் டேக வியலுவதோர் இன்பம்
வடித்து வடிவளித்த வாயைத்- தொடுத்து
மிதந்தினிய மென்காற்றின் மீதூர்ந்து செல்லும்
இதயங் கனிந்த இசை!

பாடுபட்டு பன்னாள் முயன்று பரவசமாய்க்
கூடுகட்டி வாழ்ந்த குருவியும்தான் - நாடி
வசித்த இடம்விட்டு வண்ணச் சிறகை
விரித்துப் பறத்தல் விதி!

மன்றருகில் தன்னை மறந்து மனமுருகி
நின்றவனும் கண்டான் நெடுந்திசைகள் - நன்றியும்
மன்னும் நகரம் மகிழ்ந்து மாக்கலத்தைத்
துன்னிவர வேற்குந் துறை!

மனத்தை மகிழ்விக்கும் மாலுமிகள்; மற்றும்
தனதருமைத் தாய்நாட்டு மக்கள் - புனிதப்
பணிவகத்துள் வைத்துப் பரபரப்பாய் நின்றார்.
துணிவகத்தில் தோன்றத் துதைந்து.

146