பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

யாரிடமும் பேசாதமைதியா யோடுகிற
நீரோடை கூட நினைத்துருகிப் - பாருடனே
பின்னு மொருதடவை பேசி விடைபெற்று
மன்னுகடல் மேவு மடுத்து!

என்பன சொல்லி யிவன் மெல்லச் செல்லக்கண்
டன்பர்க ளெல்லாரு மங்கங்கே - துன்பமுடன்
நின்று நினைத்துருகி நெட்டுயிர்த்து நேசத்தால்
ஒன்றி யுடைந்தா ருளம்!

கழனிகள்மேல் வைத்த கருத்தழிந்து காண்பான்
விழவணி மூதூரின் மேவி - யுழவரெலாம்
பண்ணைக்குப் பண்ணை பரிந்து விளிப்பதுநம்
கண்ணுக்கோ காணாக் கவின்.

'அரிய துணைவ ரனைவரையும் விட்டுப்
பிரியும்நாள் பேணும்நா ளாயின் - பெரிதும்
உளங்கவரு மென்மாலைப் போதே வுவக்கு
மிளங்காலை யாயிற் றெனக்கு!

கொத்தாகிக் காய்த்துக் குலுங்குமோ என்னுள்ள
முத்தமர்கட் கெல்லா முவந்தீய - இத்தினத்தில்
ஏரை யிடையி லிருத்திவருவோர்தேவை
தீரநா னிவ தேவை?

பெருமழை தம்மீது பெய்ததெனப் பேச
அரும்பும் வியர்வையர்தா மாகி - வரம்பில்
கரும்புத் திரிகை களமிருத்தி வந்தோர்
விரும்ப நானீவ தேவை?

148