பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

இவ்வளவும் வாய்விட் டியம்பியவை, இன்னுமவன்
எவ்வளவோ நெஞ்சிலிருத்தியவை - அவ்வளவும்
சீராகச் சிந்தித்துச் சேர்த்துவந்து பேணினவை
யாராலு மாயா தவை!

நல்லோனும் பின்பு நகரத்துக் குள்வரவும்
எல்லாருங் கூடி யெதிர்கொள்ளப் - புல்லி
ஒரேஎ குரலிலுரைத்தார் களோடிச்
சரேஎ லெனவந்து சார்ந்து:

'எங்களைவிட் டேகவே வேண்டாங்கா ணெங்களது
மங்கிய மாலை மயக்கத்தில் - இங்கிதம்சேர்
உச்சிப் பொழுதா யுறைந்தீருமதுரைகள்
கச்சிதம்யாம் கண்ட கனவு.

நீங்க ளெமக்கயலா ரன்றே, நினைத்தென்றும்
நாங்கள் வழிபடும் நல்லரசாண்ட ஏங்கியினி
உங்கள் திருமுகத்தை யுன்னி யுருக்குலைய
எங்களைவிட் டேகா திரும்!

தாழ்ந்த குரலில் தாயனையர் தாமுரைத்தார்;
ஆழ்ந்தகடல் நம்மைப் பிரிப்பதோ? - வாழ்ந்தநாள்
வெற்றுநினை வாக விடுவதோ, வெம்புவதோ
எற்றைக்கும் ஏலா தினி!

அல்லும் பகலும் மனவரத மெங்களுடன்
இல்லுறையும் தேவா யியங்கினீர்! - சொல்லின்
உமதுநிழ லெங்க ளுறையுட் கொளியா
யமைய மகிழ்ந்தோ மகம்!

150