பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

இறப்புக்கு மேற்ற பிறப்புக்கு மூடே
சிறப்பிக்க வுள்ளதனைச் செப்பிக் - குறிப்பாகக்
கங்கு லகற்றும் கவின்விளக்காய்க் காட்டுங்கள்
எங்களை யெங்கட் கெடுத்து!

'சதுரரும், சாந்தரும், சத்தியரும் சார்ந்து
மதுர முறவுறையும் மக்காள்! - இதரவும்
என்ன விருக்கு மியம்பிடுதற் கிங்கேநீர்
உன்னியதொன் றன்றி யுளத்து?’

அப்பொழுது சொன்னா ளலமம்மாள்; அன்புபற்றி
யிப் பொழுது சொல்வீ ரெமக்கென்றே - ஒப்பெழுத
ஒன்றுமே யின்றி யுரைப்பான் தலைநிமிர்ந்தான்
நின்றமைதி யாக நினைத்து.

அன்புறுத்தி நோக்கி யழைக்கி னதனுடனே
இன்புறுத்தி யூக்கிவிரைந் தேகுங்கள் - துன்புறுத்திச்
செல்லும் வழிமுழுதும் செங்குத்தாய்ச் சீர்க்குங்கால்
கல்லும்முள் ளேனும் கடந்து!

வதனம் மலர்ந்து வயப்படுங்கள், வாய்த்த
அதன்சிறகு கள்ளணைக்க நேரின் - உதிரம்
பெருகவே லம்புகளும் பேதுறவே நெஞ்சி
லுருவத்தைத் தாலு முவந்து.

உங்களை நாடி யுரையாடு மன்புக்குச்
செங்கைகள் சேர்த்துச் செவிகொடுங்கள் - யங்கமுறப்
பூங்காவை வாடை புடைப்பது போல் பூரணமாய்த்
தீங்காகு மேனும் தெளிந்து.

153