பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்



நிலைபேறு

’ஆண்டவ’ னென.இனி வேண்டிய தெதுவோ?

அன்னையை மகவினைப் பின்னிய தெதுவோ?

ஈண்டுமெய் யறிவினைத் துாண்டுவ தெதுவோ?

என்பிறப் பிணித்திடற் கினிமருந் தெதுவோ?

அதைப் பெறுவதற்கினி
ஆசையு றேனோ!
அதைப்பெறு வதற்கினி
ஆசையு றேனோ!

துன்பமென் பதையெது துடைத்திடற் காமோ?

தூய்மையும் வாய்மையு மெதற்குற வாமோ?

இன்பமென் பதையெது படைத்திடற் காமோ?

இன்மையி லமைதியை யிணைப்ப தெதாமோ?

அதைப்பெறு வதற்கினி
ஆசையு றேனோ!
அதைப்பெறு வதற்கினி
ஆசையு றேனோ!

சத்தியில் வுலகினில் சாற்றிய தெதுவோ?

சமரச நெறிமுறை போற்றிய தெதுவோ?

சித்திரைச் சிந்தையி லேற்றுவ தெதுவோ?

சீவனைத் தேவனாய் மாற்றுவ தெதுவோ?

அதைப்பெறு வதற்கினி
ஆசையு றேனோ!
அதைப்பெறு வதற்கினி
ஆசையு றேனோ!
161