பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்


அரியபொருள்
 

அரிதினும் அரிதான பொருள்பூமி யொன்றுதான்
என்றனைவ ரும் பகருவார்
அதைக்காட்டி லும்நல்ல பொருள் கல்வியென்றுசிலர்
அதைமறுத் துப் பேசுவார்
தருதிரென் றிருகையும் ஏந்தியிரம் போர்க்கெலாம்
தன்மன முவந்து வாரித்
தருவதால் வருங் கீர்த்தி தான்பொருள் யாவினு
தலையான தென்பர் தக்கோர்
பெரிதும் நான் ஆராய்ந்து பார்த்த அளவில்
பெரியோரைக் கேட்ட அளவில்
பெருமையுஞ் சிறுமையுங் கருதாமல் உண்மையே
பேசும்பரி சுத்தமான
இருதயத் தைப்போலும் அரியபொருள் பிறிதொன்
றிருப்பதாய்த் தெரியவில்லை
என்பதனை இன்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.

165