பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

கவிதை


கவிதை கவிதை என்போம்! - அதுகண்
கண்ட தெய்வ மென்போம்!
செவியின் செல்வ மென்போம் - சேர்த்துச்
சிந்தை பெய்து கொள்வோம்!

நினைவை நேர்மை செய்து - நெறியில்
நிலைநிறுத்து கவிதை!
கனவு போன்ற வாழ்வைக் - கலைபாய்க்
கவின்பெ றச்செய் கவிதை!

காதல் மோக னத்தை - வாழ்வில்
காண வைத்த கவிதை!
சோதி வான மணிபோல் - ஞானச்
சுடர்து லங்கு கவிதை!

பேதை யென்ற பிணையை - அறவே
பெயர்த்தெறிந்த கவிதை!
மேதையென்ற பெயரை - இட்டு
மேன்மை செய்த கவிதை

சோம்பல் சூது சோகம் - பகைமை
சுட்டெரித்த கவிதை!
பூம்பொ ழில்ம லர்த்தேன் - இனிமை
பொதிந்து வைத்த கவிதை!

21