பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

மெத்தமனங் கனிந்தவன்போல் கதிரோன் தானும்
மேற்றிசையில் போய்மறைய லானான்; வானில்
தத்தமிருப் பிடஞ்சேரப் பறவை யாவும்
தம்மினத்தோ டணியணியாய்ப் பறக்கத் தங்கிக்
கத்துகின்ற கன்றுகளை நினைத்துக் கொண்டே
கறவையெலாம் விரைந்துவரும் காம நந்தி
குத்துவிளக் கேற்றியபின் தனது காதல்
கொழுநன்வரின் அவள்மகிழ்ச்சி கூறப் போமோ!

26