பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

ஆராஇன் பந்தரும்நல் லமிழ்த மென்றன்
அகத்திருளை அகற்றவரும் திருவி ளக்காய்
தாராவை யென்னகத்துத் தலைவி யாக்கத்
தடையெதுவுங் கிடையாது தானென் றாலும்,
ஊராரின் முன்னிலையில் அவள்கைப் பற்றும்
ஒப்பறுமந் நன்னாளை யொதுக்கிக் கொண்டு
தீராத பழியாகிக் கிடக்கின் றாரோர்
'திருவாத்தன் இவ'ரெனவூர் செப்ப அத்தான்!

பித்தாய சீட்டாட்டப் பேச்சல் லாமல்
பிறபேச்சுப் பேசாத பேதை யத்தான்,
'முத்தாய மணியாய முதலுக் கெல்லாம்
முதலாகி யுள்ளவளென் மகள்தா ராதான்!
பத்தாயி ரம்ரூபாய் மொத்த மாகப்
பணம்தந்தா னுக்கிவள்பத் தினி'யென் கின்றார்!
'இத்தய மிதுகாறும் பெண்ணைப் பெற்றோர்
இயம்பாத இன்னாச்சொல் லிதுதா' னென்ன!

வாதாடி வழிகாட்டி வைத்தும், வாழும்
வகையறியாத் தந்தையுடன் வாழ்ந்து கொண்டே
கோதோடு கூடிவிளைந் தினிக்கா நின்ற
கொழும்பலவின் தீஞ்சுளையாய்க் கொள்ள நானும்,
தாதாடுங் கருவண்டு புகுந்து வெள்ளைத்
தாமரையிற் குடிகொண்ட தென்னுங் கண்ணாள்.
போதோடு வந்தெனது வீட்டில் நாளும்
புசிப்பதற்கு வகைசெய்து கொண்டு போவாள்.

37

37