பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

முத்தான முரலொளி மிளிரக் கொல்லை
முதிர்கனியி னிதழ்முறுவல் முகிழ்ப்ப, மூசும்
கொத்தான கருங்கூந்தல் முகின்மேல் முல்லை
கூன்பிறைபோல் நிலவிடவே, குயிலாய் மெல்ல
'அத்தானென் றழைத்தன்பு பெருக அன்றென்
அருகினிலே வந்தமர்ந்தாள்; அகிலத் தின்மேல்
சொத்தான தத்தனையும் தொலைத்தோர்க் கொன்றும்
சுகமுண்டா? சொல்லுங்கள் சுருக்கா' யென்றாள்.

"உழுவதற்கு மாத்திரமென் றிருந்த நன்செய்
ஒன்பதுகாணியுமறவே தொலைத்த தந்தை!
தொழுவதற்கு மாத்திரமே கண்முன் தோன்றித்
துயர்நேரின் தூரம்போய்த் தொலையும் தெய்வம்!
விழுவதற்கு மாத்திரமே போதா நீராய்
விளங்குகிற ஏரிகுள முள்ள ஊரில்
அழுவதற்குமாத்திரமே உயிரைக் கொண்டிவ்
வவனியிலே உள்ளேன் நான்ர "அத்தான்” என்றாள்

நிந்தைகளில் இதற்குநிக ரான நிந்தை
நீணிலத்தி லில்லையெனச் சொல்லு மாறாய்த்
தந்தையெனும், - தயை ஞானம், - தகவி லாரால்
தரம் தருமம் தான் குறைந்து தாமும் நாட்டைச்
செந்தமிழ்நா டென்கின்ற போதும், எந்தத்
தேன்வந்து பாயுமினிக் காதி லென்றன்
சிந்தையிதை எண்ணியொரு புண்ணாய், நானும்
சிறுகத்தேய்ந் திறந்திடுவேன் அத்தான்,” என்றாள்.

38