பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

“நிச்சயமாய் இன்றைய இந் நிலைமை நீங்கி
நிகரற்ற நிறைவாழ்வு நீயும் வாழக்
கச்சிதமாய்க் கலந்திருக்கும் உன்வாழ் நாளில்
கணக்கறுநன் னாட்களெனக் கருது கின்றேன்
துச்சமென இதையொதுக்கிக் தள்ளு தூரம்:
துயரமொடு துளியேனு மின்றி ஊரில்
அச்சமற்றிவ் வவலமதை மறந்து முன்போல்
அமைதியுடனிருதாரா என்ன கத்தில்!

கனிக்காக வளர்ந்துமரம் தழைத்தும் பூத்துக்
காய்த்தது.பின் கணிகின்ற வரையும் காக்கும்!
தனக்காகத் தன்வாழ்வுக் காகச் செய்யும்
தனிக்கடமை மகவினைத்தாய் தந்தை காத்தல்!
பனிக்கால வயிற்றினிலே பிறந்திப் பாரைப்
பரவசம்செய் கின்றஇளவேனில் தான்நீ!
உனக்காக நாணிந்த உடல்வைத் துள்ளேன்:
உயிராக இதிலிருநீ தாரா!" என்றேன்.

"நிந்தைகளில் நிகரற்ற நிந்தை யென்றும்
நிலைத்திருக்கத் தேடிவைக்கும் என்னைப் பெற்ற
தந்தையொரு கொடியவர்தான்; அவர்நான் சாகும்
தடங்காட்டிக் கொடுக்கின்றார்; தகுந்த தான
விந்தைமிகு செஞ் சொற்கள்விழைந்து கூறி
விரைந்தென்னைச் சாகவிடா திவ்வாறாகத்
தந்திரமாய்ப் பேசியுயிர் தரிக்கச் செய்து
தவிக்கவைக்கும் கொடியவர்நீர் என்றாள் தாரா.

39