பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

பழுதுவரும் எனநினைத்துப் பாராதத்தான்
பத்தாயிரத்தையெதிர் பார்க்கின்றார்: கேட்
டழுதுவரும் உனைச்சிரிக்க வைப்ப தற்காய்,-
அகமுடையா ளெனவுனைநான் அழைப்ப தற்காய்,
உழுதுவரும் மாடெனவே களைப்புமேலிட்
டுடல்வலிக்கும் வரையுமுளம் ஒன்றிக் குந்தி
எழுதவரும் என்திறமை யனைத்தும் கூட்டி
இணையில்லாக் காவியத்தை எழுது கின்றேன்.

மண்ணிர மறமறுகி வளர்ச்சி குன்றி
மனங்கவரும் பசுமையெழில் மாறி வாடித்
தண்ணிரைத் தாதாயே! என்று பாரைத்
தாலைதாழ்த்தி இரக்கும்பயிர் போன்றி ராமல்,
கண்ணிரைத்துடைத்துவிட்டுக் கவலை யின்றிக்
காத்திருதா ராஇன்னும் கொஞ்ச காலம்!
எண்ணாயி ரம்ரூபாய் சேர்த்து விட்டேன்;
இனியிரண்டா யிரமிதனால் சேரும் என்றேன்.

உள்ளத்தில் இதுவரைநான் ஒளித்து வைத்த
உண்மையிதை உணர்ந்துளமும் குளிர்ந்த தாரா.
முன்ளொத்து வருத்தத்தை மூட்டும் பெற்ற
முட்டாள்சொல் களைந்தவளாய், முறுவல் மேவக்
கண்ணொத்து வடிகின்ற சுடர்நீ லங்கள்
கமலத்தில் காண்பனபோல் களிக்கும் கள்
வெள்ளத்தைத் துடைத்தபடி "சிக்க லெல்லாம்
விடுவித்து விட்டீர்நீர் அத்தான்!"

40