பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

"பண்ணாவேன் நானும்; நீர், பண்ணுக்கேற்ற
பாட்டாவீர்! அதுவன்றேல், பாங்காய்ப் பார்க்கும்
கண்ணாவேன் நானும்; நீர், கண்ணுக் கேற்ற
கவிஞனாவீர்! அதுவன்றேல், கருத்தைக் காட்டும்
எண்ணாவேன் நானும்; நீர், எண்ணுக் கேற்ற
இலக்காவீர்! அதுவன்றேல், எழில்மிகுந்த
பெண்ணாவேன் நானும்; நீர், பெண்ணுக் கேற்ற
பேராண்மை பிறங்கிடுமாண் ஆவிர்!" என்றாள்.

தேனொத்த வெண்ணிலவை வாரிக் கொட்டித்
தேகத்தை யதில்திளைக்கச் செய்யும் திங்கள்,
பூநத்தித் திரியும்கரு வண்டி ரண்டைப்
பொன்னொத்த முகத்தினிலே பொருத்திக் கொண்டு
வானத்தை வெறுத்துவிட்டு வந்தின் றிந்த
வையத்தி லெனதுமனை புகுந்தோர் மாதாய்
மோனத்தைக் கலைத்துவிட முயன்றேன் முன்னால்
மோகனங்கள் புரிகிறதே நன்றாய்" என்றேன்.

"மோசமிதுதான்.அத்தான்! மொழியு மொன்று:
முறுவல்வே றென்றெனநீர் முயன்று போடும்
வேசமிது வேண்டாங்காண்! இன்னும் நானோர்
விவகாரம் தெரியாத விளரி யன்றே!
நேசமதை நெஞ்சினிலே நிறைத்துக் கொண்டு
நேர்மாறாய்ப் பேசிடினும் என்னாம்!
முல்லை வாசமதை மறைக்கமுடி யாது மூடி
வாழையிலை தனில்வைத்த போதும்!" என்றாள்.

41