பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

"அல்லியர சாணிகதை படித்துப் பாரென்
றறிவித்த முறையில்தவ றென்ன கண்டாய்?
சொல்லதனை முன்னேநீ சொல்லா விட்டால்,
சொக்கவைக்கு கனியிதழ்வாய் பொக்கை யாக,
முல்லையென முத்தென்ன முருந்தே யென்ன
மோகனமாய் முறுவலித்து மூடும் உன்றன்
பல்லனைத்தும் மீதமிச்ச மின்றித் தட்டிப்
பைதனிலே போட்டனுப்பி வைப்பே" னென்றேன்.

"பெண்ணாக இருந்ததனால் பிழைத்தாய்! அன்றேல்
பிழைசெய்த கையதனைப் பிய்த்தெறிந்து
மண்ணாக மக்கிவிடச் செய்தி ருப்பேன்:
மட்டுமரி யாதையறி யாத பெண்ணே!
புண்ணாகு மாறிரவு பூரா எண்ணிப்
புகுங்கிமனம் நொந்துகிடக் கின்றேன் நானும்!
ஒண்ணாது கதவுதனைத் திறக்க! நீயும்
ஒடிப்போ நிற்காதே இனியிங்" கென்றேன்.

"என்மானம் மதிப்புமரி யாதை யென்ப
தெல்லாமும் உமக்கிளப்ப மான தேனோ
கண்மானும் இதயத்தி லிருந்து காதல்
காவியத்தை வடிக்கின்ற கர்வ மோகாண்!
பொன்மானும் எழில்பாவை மீதில் சேற்றைப்
பூசுமுங்கள் பொல்லாங்கு பொறுக்கா தென்றன்
தன்மான உணர்ச்சியினால் தாக்குண் டீர்!நும்
தலைக்கணமும் திருமினி!" என்றாள் தாரா.

46