இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
என்னை மறந்த நிலையில் விளைந்த
இனிய மயக்கினிலே - அருங்
கன்னிக் கவிதையென் காதலி சீவனைக்
கட்டித் தழுவுகிறாள்!
அன்பும் அறிவும் கலந்த அமிழ்தெனும்
அற்புதம் சேர்க்கையில்நான் - இருந்
தின்பச் சிகரத்திலேறித் திளைக்கிறேன்
இவ்வுல கந்Oதனி லே!
58