பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்


வலைக்குள் கலை

நீல வானில் தவழும் பிறையோ
நீணீ லத்தில் நிலவ நினைத்து நான்
மேலும் மேலும் பயிலத் தொடங்கினேன்
மேதை யென்னுமப் பாதையை மேவவே!
ஆலை வாயில் கரும்பென நூல்களை
ஆய்ந்து சாறு பிழிந்திடும் வேளையில்,
வேலை யற்றெவ ரேனுமாங் குற்றிடின்
வெறுப்பு, வேதனை, வெஞ்சினம் மிஞ்சுமே!

நெஞ்சு ரம்மிதம் மிஞ்சி யிருந்ததோ
நேர்மை யோஅன்றிக் காரணம் வேறெதோ!
கொஞ்சம் கூடஅஞ் சாமல் சகோதரர்
கோபதாபம் பொருட்படுத் தாமலே
செஞ்சொல் கன்னித் தமிழைப் பயில்வதே
செயலெ னக்கொண் டொழுகியதால்தினம்
பஞ்சம், பட்டினி, ஏளனம், என்பாள்
பங்கில் தங்கிப் பலுகிப் பெருகவே!

நஞ்சி தென்ன ஒதுக்கி உறவினர்
நாளும் தப்புக் கணக்குகள் போட்டதால்,
பஞ்சின் மெல்லடிப் பாவைதா ராவுளம்
பதைபதைத்துயிர் சோர்ந்து வருந்தவே,
மஞ்சு சூழ்மலை யாய்மலைச் சாரலாய்
மனங்க வர்ந்த அருவிக ளாவியழில்
விஞ்சும் வெள்ளியங் காட்டினை விட்டுநானை
விரைந்து கோவையில் தங்கினேன் வேண்டியே!

63