பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

கொலைக்குக் கூடத்தம் கூடப் பிறந்தவர்
கூடமாட உதவும் உலகினில்
கலைக்குக் கைதர முற்றும் மறுத்துநான்
கலக்க மின்றி முயன்றுமுன் னேறியும்,
மலைக்குள் சிங்கம் புலிகட்குத் தப்பியே
மகிழ்ச்சி கூர்ந்திடும் வேளை மறதியால்
வலைக்குள் பட்ட கலையென வேமண
வாழ்க்கை யால்தடு மாறி வருந்தினேன்.

ஒட்டை வீட்டில் ஒருசுவ ரோரமாய்
ஒஞ்சரித்திரு கண்களும் மூடியே,
மூட்டுந் துன்பப் பிசாசுகள் முன்வரின்
முறுவல் பூத்து விரட்டுக நீ'யெனப் பாட்டி
சொன்ன பழமொழி ஒன்றிலே
படிந்து நெஞ்சம் தடிந்து கிடக்கையில்
வீட்டு வாசலில், கிண்கி னெனும் ஒலி
விரைந்தெ ழுந்து விடும்படிச் செய்தது!

காக்கிச் சட்டையைப் போட்டகை யாலொரு
கடிதம் கதவின் இடுக்கில் நுழைந்தது;
சீக்கி ரம்அதை நோக்கி எடுத்துநான்
செய்தி காணச் சிறிது படித்ததும்
தாக்கி நெஞ்சைத் துளைத்திடும் அம்புகள்
தாமெ ழுத்துரு வத்தினில் தோன்றின.
நாக்கு லர்ந்தது: மூக்கும் உலர்ந்தது:
நடுங்க வந்தொடங் கிற்றுடல் யாவுமே!

64