பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

இதய வேட்கை

'இன்னமும் எத்தனைநாள் - தனியாய்
இங்கே இருப்பதுநான்?
'சின்னஞ் சிறுசெயலும் - தப்பாய்ச்
செய்தனை நீ'யென வே
என்னை அலட்டுகிறார் - அப்பா
என்றுமில்லாவிதமாய்!
தன்னந் தனிமையிலே - நொந்து
தவித்துப் புலம்புகிறேன்.

உண்ணப் பிடிக்கவில்லை - இரவில்
உறக்கம் வருவதில்லை!
கண்ணிற் படும்பொருளில் - நீரே
காட்சி யளிக்கிறீரென்
எண்ணம் அனைத்தினிலும் - நீரே
இரண்டற் றியங்குகிறீர்!
பெண்ணென் றிருப்பவரில் - யானோர்
பித்திகொ லோ அறியேன்!

கண்ணைப் பறிக்குமெழில் - இளங்
காரிகை யார்களித்துத்
தண்ணென் முழுநிலவில் - ஒன்றித்
தம்மை மறந்தவராய்
பண்ணின் குரலெழுப்பி - ஆடிப்
பாடி மகிழ்கையில்நான்
வெண்ணெய் எனக்கிடந்து - வீட்டில்
வெம்பி - உருகுகிறேன்!

66