பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

புடமிட்ட பொன்

விற்பு ருவமதில் வியர்வை பூத்திடவும் - 'கொஞ்சம்
வெகுளி எனஅவை மேலும் கோனிடவும்
சிற்பம் உயிர்பெறும் மந்தி ரச்சொல்லால் - எழுந்து
சேர என்னிடம் தேடி வந்ததென.
நிற்ப தற்கிது போது' மெனஇருந்த - இல்முன்
நெஞ்சு குளிர்ந்திட வந்து நின்றவன்காண்
கற்புக் கரசியென் காதல் தாராவென்-றந்தக்
கதவின் சந்துகள் காண உதவினவே.

'சரக்கென் றெழுந்ததும் கதவின் தாழ்நீக்கிச் - சற்று
சாய்ந்து நிலைப்படி யோரம் நின்றவளாய்
சிரிக்க முயன்றவனாகியே மொழிந்தேன்:' எனது
சீவன் நலமுடன் வந்து சேர்ந்ததென.
உருக்கம் உவகையோ டுரிமை உணர்வெனவே - பண்புகள்
உந்த ஒருதுளி அதரம் மலர்த்துவளாய்
அரைக்கண் சுருக்கியே அவளும் அகம்பார்த்தாள்- பற்பல
அருத்தம் அதில்நளிை பொருத்தி ஆவலுடன்!

கையி லிருந்தஅப் பையை வாங்கியதும் - 'வா'வெனக்
கனிவு காட்டியோர் வார்த்தை கூறியதும்,
வெயிலில் சென்று களைத்து வந்தவர்க்கே - நிழலாய்
விளையும் இன்பமும் விளங்கு' மென்பதுபோல்
செய்வ தென்னயென் றெதுவு மறியாமல் - 'பேதைச்
சிறுமி யெனஉமை விட்டு நான்பிரிந்தேன்.
தெய்வ மேதயை கூர்ந்து மறந்திடுக! - என்றவள்
திக்கித் தேம்பவும் பக்கெனச்சிரித்தேன்.

72