பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

எதுவொன் றிவளிடம் இருக்க வேண்டுமெனப் - பள்னாள்
எண்ணி நானெதிர் பார்த்தி ருந்தேனோ
அதுநி றைந்தவ னாகி யேவந்தாள் - புடமிட்
டற்பு தச்சுடர் வீசும் பொன்னெனவே!
புதிய சிந்தனை பொதிந்த வார்த்தைகளைத் -தாரா
புகலக் கெட்டுடல் பூரித்தவனானேன்!
மதியு லாவிய வான மண்டலம் போல் - நெஞ்சில்
மகிழ்ச்சி யாகிய நிலவு மேவியதே!

74