பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

எல்லையில் லாத மனங்கமழ்ந் திவ்வுல
கெங்குமெல் லாரையு மின்புறுத்தும் - எழில்
முல்லை பெறும்நளிை நல்ல மலர்கள்
முகிழ்க்கும் அரிய பசுங்கொடியும்

சேயற்ற தாயெனத் தன்னுளஞ் செத்துச்
செயலு மிழந்து தரைதனிலே - பெரும்
நோயுற்ற வாறுதன் வாயுற் றழுதுமெய்
நொந்து கிடந்தது துறையிலே!

கல்லுங் கரையக் கசங்கிக் கிடக்குமக்
காட்சியைக் கண்டு கவலையொடு - ஆகா!
முல்லையே! சொல்லுனக் குற்ற துயரம்
முழுவது மென்னிடம் பற்றுடனே!

கல்லின் வலிதெனச் சொல்ல இப் புற்றரை
காய்ந்து கசங்க வருத்தியதோ? - இல்லை
மெல்லிய மேனியில் வெல்லைப் பொறாமலே
மெத்தவும் நைந்து குலைந்தனையோ?

வண்ண மலர்க்கொடி யாகிய வுன்னுடல்
வாட்டம் தவிர்த்து வளமுறவே - வானத்
தண்ணமு தென்னக் குளிர்ந்த பெருமழைத்
தாரைகள் வேண்டித்தவித்தனையோ?

உன்றளிர் மேனி யுலைவினுக் கேவலு
வயூட்டும் மருந்தை யுதவிடவே - அந்தத்
தென்றல் மருத்துவி யின்றும்வ ராததால்
தேம்பி யழுது திகைத்தனையோ?

81