பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

இப்படிச் செய்தபின் இவ்வுல கத்தி
லிருந்துயிர் வாழுவது - இனி
எப்படி? ஐயனே! எப்படி? எவ்விதம்?
என்ன வகையிதற்கு?

கொல்லையில் வாழுங் கொடியன்று நாணிக்
கொடுமைப் படுவதற்கும்!' - என்று
முல்லை மொழிந்த முறையிது கேட்டு
முறுவ லொடும் மொழிந்தேன்;

'பாரி பிறந்தஇப் பைந்தமிழ் நாட்டினில்
பச்சைப் பசுங்கொடியே பிறர்க்கு
வாளி வழங்கும் வழக்கறி யாதுநீ
வாழ விரும்புவதோ!

தமிழை வளர்க்கும் கவிஞன் தழைத்திடத்
தண்தலை தந்தவனும் - அருங்
குமணன் பிறந்த குவலயந் தன்னில்
கொடேனென்று கூறுவதோ!

உன்னிட முள்ள வுயர்ந்த தனைத்தும்
உலகுக் களித்திடுக! - எனத்
தன்னிகரற்றநம் காந்தி யடிகளும்
தம்திரு வாய் மலர்ந்தார்!

ஈந்தவ ரன்றி யிருப்பவ ரெல்லாம்
இறந்தவராகிடுவார் - இது
மாந்தர்க்கு மாத்திர மன்று; மலர்க்கொடீ!
மற்றுனக் கும் பொருந்தும்!

83