இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியகம்
செக்கச் சிவந்தநன் மேனியன், வாலிபன்
சிந்தை முழுது முருக்குகிற
துக்கம் மிகுந்த முகத்தின னக்கணம்
தோன்றியே நின்றனன் கண்னெதிரில்!
சொந்த வுறவினரான வொருவரின்
சுந்தரச் சாயல், சுறுசுறுப்பும்
அந்த இளைஞனின் மேனி யகம்புற
மாக அமைந்தததிசயமே!
முல்லைக் கொடியின் முகமும் கவிழ
முறையுடனிங்கிவ் வினையனுக்கு
நல்ல விதத்தி லுதவியே நானுமென்
நன்மதிப் பைநிலை நாட்டிடவே.
பொன்னான வேளை பொருந்திய தென்னப்
புகல்பவ னாகிப் பொருமலுடன்,
என்னா லியன்றதைச் செய்தவன்; தீர்ப்பதற்
கென்ன குறையுளக் குண்டெனவே!
நெஞ்சம் படபட வென்றுதுடிக்க
நெகிழ்ந்து நெருங்கியே நானவனைக்
கொஞ்சமும் கூடக்கூ சாமல் தழுவியே
கூறெனக் கூறினேன் கோமளமாய்!
ஆறுத லான இவ் வு,றகல் சொற்களா
லவனு மகமகிழ்ந் தார்வமுடன்
கூறினன் கூறத் தகாத குறைகளென்
கும்பி பகீரென் றெறிந்திடவே!
85