பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

கால னெனச்சொலு வாரெனைக் கண்டவர்;
கண்க ளிரண்டுமில்லாதவன்நான்!
ஞால மிசைவலு வானவ ராமொரு
நல்ல மனிதனை நாடிவந்தேன்!

நாழிகை யைமணி யாக்கி யிரவினை
நண்பக லாக்கிய மோட்டுகிறேன்:
ஊழிகளைச்சிறு வேளைகளாக்கி
உலகை யுருட்டியுங் காட்டுகிறேன்!

கண்ணுக்கு முன்னொரு 'காணத் தகுந்தநற்
காட்சி யெனக்கை யொலியெ முப்ப,
மண்ணில் மறைந்தொரு சின்ன விதையை
 மராமர மாக்கியும் மாற்றுகிறேன்.

சின்னஞ் சிறுவுரு, பண்ணும் மழலைச்
சிறுமியை யேந்திச்சீ ராட்டயிலே,
கன்னலினும்நளிை நல்ல சுவைதரும்
கற்கண்டுக் காரிகை யாக்குகிறேன்!

சந்திரன் சூரியன் விந்தை மிகுந்ததோர்
சத்துரு மித்தரு வாயமைத்து.
அந்தி பகலெனப் பந்தப் படுத்தியே
ஆனந்த மூட்டுவே னாயிடினும்

ஈகை யிரக்க மிருக்கு மொருவகை
இவ்வுல கெங்கணும் தேடியேஎன்
தேக மிளைத்தது. தேய்ந்தன காலும்:
தெரிந்தது நீரிங் கிருப்பதுவும்!

86