பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியகம்

'கண்ணிரண் டுந்தெரி யாத குரு'டென
காசினி மீது சனித்துவிட்டேன்.
அண்ண இரண்டுகண் ணுண்டெனி லொன்றை
யளித்தெனைக் காத்திட வேண்டுமென்றான்.

முல்லைக் கொடியின் துயரைத் தவிர்க்க
முயன்றது முற்றிலு மேயெனக்குத்
தொல்லையாய் வந்து தொலையத் தொடர்ந்தொரு
துன்பமுங் கூடவே தோன்றிடுது'

கண்ணையும் காசென எண்ணுகின் றானிவன்
கயவ னெனவே யினியெதனைப்
பண்ணுவதென்று பயந்தது நெஞ்சம்
பதறிய தென்னுட லும்முயிரும்!

'கண்ணப்ப நாயனாராகிக் கலங்கிடும்
காலமும் வந்துற்ற தோவெனவே
எண்ணவும் பண்ணிய தென்தலை எந்திர
மென்னவும் பண்ணிச் சுழற்றியதால்!

செப்படி வித்தையைச் செய்தனன் 'சீ' யெனச்
சிந்தை கலங்கிய தும்மயங்கித்
தொப்பெனப் புற்றரை மேல்விழுந் தேன்உயும்
தோதெது வும் துலங் காதவனாய்!

உதவி புரிகிற வுத்தம நற்குண
முள்ளஎன் அண்ணலே! மேடுகுழி
எதுவுமில் லாத இடத்தினில் தொப்பென
இப்படி யேன் விழுந்தீர்க'ளென்றான்

87