பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

'உன்னைநான் தொட்ட அளவிலென் னுள்ளத்
துணர்வு முழுதும் தொலைந்து - அடா!
என்னுயிர் கூடவுடலைவிட் டிப்பொழு
தேகிற் றெனவுள்ள தென்கிறேன்.

'காணாமற் போகு முயிரைக் கணத்திலே
கண்டெடுத் துத்தரு வேனுளம் சற்றுங்
கோணாமற் சீக்கிர மாயொரு கண்ணைக்
கொடுத்தருள் செய்யுங்க' ளென்றனன்.

ஆழந் தெரியாமல் காலைவிட் டேனடா!
அற்பனே! நீ கெடு வாயடா! - என்றேன்
கோழையைப் போலப் புலம்பவே, முல்லைக்
கொடியு முரைத்தது கோபமாய்!

'சொல்லுக்குச் சொல்லழ காகவே சொல்லியென்
சோகந் தவிர்த்திடச் சொன்னநீர் - ஐயா!
சொல்லைச் செயலினில் காட்டெனச் சொல் லவே
சொக்கி மயங்கி விழுகிறீர்!

பாரி குமணன் கதைகளைக் கூறிப்
பரிபவம் தீர்க்கப் பரிந்தநீர் - கொஞ்சம்
நேருக்கு நேர்செய்து காட்டெனக் கூறவே
நினைவு தவறி விழுகிறீர்!

பாரி லிருக்கும் வரையினி யேனும்
படிப்பினைப் பாங்கறியாமலே - நாளும்
ஊருக் குபதேசம் செய்வதை மட்டும்
உடனடி யாய்மறப் பீரென

88