பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

காரிய மில்லை யினியிருந் தென்னக்
கசந்தவ னாகி யெழுந்ததும் - மெல்ல
ஊருக்குப் போகும் வழிபிடித் தேனொரு
உமையைப் போலன்று நானுமே!

'தேவியே! என்குறை தீர்த்திடு வாயெ'னத்
தெருவினில் கோவிலைக் கண்டதும் - நொந்து
கூவவே, 'ஏனிதோ வந்தவிட் டேனெ'னும்
குரலும் குளுமையாய்க் கேட்பது.

'கலகல' வென்ற சிரிப்புடன் கூடவே
காதல் களிமயி லன்னவள் - வந்து
'பலபல' வென்று விடிந்த தெழுங்கள்
படுக்கை சுருட்டலா மென்றனள்!

89