பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



ஆனால், அகோர் என்பவனை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு அவர்களோடு வெளியே புறப்பட்டுச் சென்றேன்.

வானத்தின் அடிவாரத்தில், தொலைவில் கண்ட மரங்களின் உச்சி நீல நிறமாகத் தோன்றிய திசையில், கரு நீலமான மேகத்தின் மெல்லிய ஒழுங்கு அந்த மரங்களின்மேல் அழகாக விளங்கியது. நான், கற்பனை உணர்வோடு விளக்க முயன்றேன். அழகிய நீலநிறக் கண்ணின் மேல் புருவத்தில் தீட்டப்பட்ட மை போல் விளங்குவதாகக் கூறினேன்.

என் நண்பர்களில் ஒருவருக்கு அது கேட்கவில்லை.இன்னொருவர்க்கு அது விளங்கவில்லை. மற்றொருவர், “ஆமாம்! மிக மிக அழகானது” என்று சொல்லி முடித்து விட்டார். அதற்கு மேல் கவிதை உணர்வோடு எண்ணவும் பேசவும் எனக்கு ஊக்கம் பிறக்கவில்லை.

(1892ஆம் ஆண்டு, மே 12இல் பூரிலிருந்து எழுதிய கடிதம்)