பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



உடலில் நலிவு நகா்ந்து கொண்டே சென்றது. நண்பா்கள், பணியாளர்கள், மாணவா்கள் எல்லாரும் அருகமா்ந்து கண்ணைக் காக்கும் இமைகள் போல அவரிடம் செயல்பட்டார்கள் சாந்தி நிகெதன் கலைக் கழகத்தை விட்டு,சத்திர சிகிச்சைக்காகக் கவிஞர் கல்கத்தா நகா் சென்றார்.

“மனிதன் தெய்வமானான்”
காந்தியடிகள் கண்ணீர்

சிகிச்சையும் முடிந்தது, கவிஞர் பெருமான் தாகூரின் ஆவியும் பிரிந்தது! 1941-ஆகஸ்டு 7-ஆம் நாள் ரவீந்திர நாத் வங்க மண்ணைவிட்டு மறைந்தார். இந்த ஆறாத் துக்கத்தைக் கேட்ட காந்தியடிகள் மனம் மயங்கிப் பதறி, சொல்லொணாக் கவலையடைந்தார். ‘மனிதன் தெய்வமானான்’ என்று அறிக்கை விடுத்து ஆறுதல் பெற்றார்.

“நான் மக்களிலே ஒருவன்! அவர்களை விட உயர்ந்தவன் அல்லன்! நான் வணங்கும் மக்கள் அவர்களிலே அநேகர் உண்டு! என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவுத் திருமகள், இந்தியாவின் அன்புச் செல்வன்” என்றார். காந்தியடிகள் கவிஞர் தாகூர் பெருமகனுடைய மறைவால், அவர் உருவாக்கிய அறிவாலயங்களான சாந்திநிகேதன், விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் பணியாளர்கள் கண்ணிர் பெருக்கினர்.