பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



மரணத்திற்கு விருந்து

மரணம் உன் வாழ்வின் கதவைத் தட்டும் அந்த நாளில் நீ அதற்கு என்ன நல்குவாய்?

ஆ! என் விருந்தாளியாக வந்த மரணத்திற்கு முன் என் வாழ்வு என்னும் நிறை குடத்தையே வைத்திடுவேன்; வந்த விருந்தாளி வெறுங்கையுடன் திரும்பிப் போக விட மாட்டேன்.

மரணம் என் வாழ்வின் கதவைத் தட்டும் இறுதி நாளில் மரணத்தின் முன்னிலையில் மழைக்காலப் பகல்களுக்கும், வேனில்கால இரவுகளுக்கும் உரிய இனிய தேனையெல்லாம் வைத்திடுவேன்; என் வாழ்வில் முயன்று தேடிய பயனை எல்லாம் வைத்திடுவேன்.

(கீதாஞ்சலி பாடல்-90)

ஓ! மரணமே! என் மரணமே! வாழ்வின் இறுதிப் பேறே! வருக வந்து என் செவியருகே மெல்லச் சொல்லுக

உன்னை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் நான் காத்து வந்தேன்; ஏன் எனில், உன் பொருட்டாகவே நான் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பொறுத்து வந்தேன்.

யானாக இருப்பவை, என்னிடம் இருப்பவை, என் நம்பிக்கை, என் அன்பு எல்லாம் யாரும் அறியாமல் உன்னை நோக்கி என்றும் சென்று கொண்டிருக்கின்றன; உன் கண்களின் இறுதிப் பார்வை ஒன்று போதும்; என் வாழ்வு என்றும் உன்னுடையதாகி விடும்.

(கீதாஞ்சலி பாடல் 91)