பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

15




இவ்வாறு தாகூர் அறிந்த விவரங்கள் எல்லாம் பிற்காலத்தில் அவருக்கு எவ்வெவ்வாறு பயன்படப் போகின்றன என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாதல்லவா?

தனது வீட்டு வேலைக்காரர்கள் மூலம் கிடைக்கும் கருத்துக்களை, உணர்வுகளைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம், அவருக்கு ஏற்படும் போதெல்லாம், ரவீந்திரர் அவர்களை நாடிச் செல்வார்.

சில நேரங்களில் வேலைக்காரர்கள் இல்லாதபோது, தனது தாயிடமும், அத்தையிடமும் சென்று அவர்களை வற்புறுத்தி வற்புறுத்திக் கதைகளைக் கேட்பார். அவர்களும் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களிலே எல்லாம் வங்காளத்துக் கதைகளை எல்லாம் கூறுவார்கள். ரவீந்திரரின் இலக்கிய தாகத்தை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.

வேலைக்காரர்களிடம் கேட்ட கதைகள் அம்மா, அத்தையிடம் அறிந்து கொண்ட இலக்கிய உணர்வுகளுடன் தேவேந்திர நாத தாகூர் பணியாற்றிடும் அலுவலக கணக்கர் கைலாசம் என்பவரும் கதை சொல்வார். அந்தக் கணக்கர் தேவேந்திர நாத தாகூரின் குடும்ப நண்பர்களுள் ஒருவர். வங்க மொழியின் புராணக் கதைகளை அறிந்தவர்! புராணிகர் அவரிடம் சென்று கதைகள் கூறுமாறு தொல்லைகளைக் கொடுப்பார் ரவீந்திரர்.

அதனால் தனக்குத் தெரிந்த புராணக்கதைகளைக் கூறி மகிழ்விப்பார் .இடையிடையே புராண, இதிகாச ஸ்லோகங்களையும் எடுத்துச் சொல்லி அவற்றுக்குப் பொருள் உரைத்து விளக்கிச் சொல்வார்.