பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

45



தாகூர் எழுதிய அந்தத் ‘துறவி’ என்ற கதை இதுதான். உலக வாழ்க்கை, உயர்வுக்குத் துணையே அன்றித் தடை ஆகாது என்பதற்காகவும், அன்பு நெறிதான் வாழ்க்கைக்கு உரியது என்பதை உலகுக்கு உணர்த்தவும், இந்தத் துறவி நாடகத்தை அவர் உலகுக்கு வழங்கினார்!

வாழ்வியலில் தாகூர் துன்பவியலை எழுதுவதில் வல்லவர் என்பதை நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்குரிய சான்றான ஒன்றுதான் ‘துறவி’ நாடகமாகும்.

அதே ஆண்டில், ரவீந்திரருக்குத் திருமணமும் நடந்தேறியது. மிருணாளினி என்ற மாதரசியை, அவருக்கு மனம் செய்வித்தார்கள். அந்த அம்மையார் கவிஞர் தாகூரின் குண்ங்களுக்கேற்ப பண்பரசியாகவே அமைந்தார்!

“என் சமயம் மனிதன் என்பதே!”

கவிஞர் இரவீந்திர நாத் தாகூரின் தந்தையார், பிரம்ம சமாஜம் எனும் ஓர் அமைப்பை உருவாக்கிய சான்றோர்களிலே ஒருவர். இந்த அமைப்பு இந்து மதத்திலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை அகற்றி, மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அமைந்த ஒரு சீர்திருத்த அமைப்பாகும்.

பலதெய்வ உருவ வழிபாடுகளை எதிர்த்தும், ஒன்றே தேவன் என்பதை ஆதரித்தும் உருவான அமைப்புதான் பிரம்ம சமாஜம்! தனது தந்தையாருக்குப் பிறகு அந்த சமாஜம் உடைந்து போனதால், ரவீந்திரர் ஆதி பிரம்ம சமாஜம் என்ற ஒரு பிரிவுக்கு செயலாளரானார்! தனது இயக்கத்தை ஆதரித்துப் பல கூட்டங்களிலே அவர் பேசினார்! மக்களுக்கான தொண்டுகளைச் செய்தார்.