பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

63



கவிஞர் தாகூர் தனது குடும்பத்துடன் 1901ஆம் ஆண்டில் சாந்தி நிகேதன் சென்று குடியேறிய பின்பு வந்த நூல் ‘நைவேத்தியம்’ அதற்கடுத்து வேறு இரண்டு நூல்களையும் சாந்தி நிகேதனில், இருக்கும்போது அவரது வெளியிட்டது தந்தைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது.

வழிபாட்டுக் கொள்கை

தேவேந்திர நாத்துடன் அவரது மூத்த மகனும், ரவீந்திரரும் இணைந்து சாந்திநிகேதனில் யோகக் கலைகளையும், தியான வழிபாடுகள் மற்றும் இறைத் தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வந்ததால், அந்தக் கலைக் கோயிலுக்கு இந்திய மாநிலங்களிலிலே உள்ள பேரறிவாளர்கள் பலர் அங்கே அடிக்கடி வந்து அதன் பயனை மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரிவுபடுத்திச் சென்றார்கள். அதற்கான பொருளாதார வரவும் பெருகியது.

மக்கள் வழிபாட்டுக்காக ஒர் தனி இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. வழிபாட்டுக்குரிய சில விதிகளும் அங்கே உருவாயின. கடவுள் உருவமற்றவர்! விக்கிரக வழிபாடு கூடாது; எந்தச் சமயத்தையும் குறை சொல்லக் கூடாது; எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது என்பவை சாந்தி நிகேதனில் நடைபெறும் சில வழிபாட்டு விதிமுறைகளாகும். இதனால் அந்தப் பகுதி வாழ் மக்கள் அந்த வழிபாடுகளில் ஏராளமாக வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த சமயத்தில் ரவீந்திரர், சாந்திநிகேதனில் குழந்தைகள் பள்ளி ஒன்றையும் தனது தந்தையின் வாழ்த்துதலோடு