பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உக்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ் மாகே
காஹே தவஜயகாதா
ஜன கண மங்கள நாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஐயஜய ஜயஹே

இந்தப் பாடலைத்தான் மஹாகவி ரவீந்திர நாத் தாகூர், 1911-ஆம் ஆண்டில், தனது ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிரம்ம சமாஜ ஆண்டு விழா நடைபெற்ற போது பாடிக்காட்டினார்!

தாகூர் பாடலின் தமிழாக்கம்:

இந்தியத் தாயே!
மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே
எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும்,
குஜராத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும்,
ஒரிசாவையும், வங்காளத்தையும்
உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர்
விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன;