பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

75




நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே!
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கவிஞர் பெருமான் ரவீந்திர நாத் தாகூர் பாடிய அந்தப் பாடலை, இந்திய அரசாங்கம் நாட்டு வணக்கப் பாடலாக ஏற்றுக் கொண்டு, கவிஞர் தாகூரைக் கெளரவித்துள்ளது அந்தப் பாடல் இந்திய அரசு மூவண்ண அரசுக் கொடியை ஏற்றும்போது கவிஞர் தாகூரது தேசப் பக்தியை நினைவிருத்திக் கொண்டு ஒலிக்கப்படுகிறது. இந்திய அரசும் மாநில அரசுகளும் நடத்தும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளின் இறுதியிலும் கவிஞர் தாகூர் பெருமகன் எழுதிய ‘ஜன கண மன’ பாடலைப் பாடியே முடிப்பதை இன்று நாம் பார்த்துப் பரவசப்படுகிறோம்!