பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

7



இந்த வேடிக்கைகளை எல்லாம் கவிஞர் தாகூர் பார்த்து “தமிழ் மக்கள் இங்கிலீஷ் மோகத்திலே இவ்வாறு பேய் பிடித்தது போல அலைகிறார்களே, இவர்களை எவ்வாறு திருத்துவது” என்று மனம் நொந்தார்.

ஒவ்வொரு இந்தியனும், அவரவர் தாய் மொழியில் தான் பேசவேண்டும்; எழுத வேண்டும் என்ற கொள்கையுடையவர் கவிஞர் கோமான் தாகூர். அந்தத் தாய்மொழிப் பற்றுணர்ச்சியை, தான் பிறந்த வங்காள மக்களுக்கும்-மாணவர்களுக்கும் இடைவிடாமல் வலியுறுத்தி வருபவர். பாராட்டு விழா நடத்தும் தமிழர்களிடம் தாய் மொழிப் பற்றை எப்படி வலியுறுத்துவது என்று சிறிது தயங்கினார்.

அப்போது இரண்டு தமிழறிஞர்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். விழாப் பொறுப்பாளர், அந்த இரு பெரும் தமிழ்ப் புலவர்களை கவிஞர் ரவீந்திரரிடம் அறிமுகப்படுத்தும்போது, “ஐயா, இவர்கள் இருவரும் சிறந்த தமிழப் பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் கவிஞர்கள், பத்திரிகை தொடர்புடைய எழுத்தாளர்கள்” என்று ஆங்கிலத்தில் பேசி அறிமுகப்படுத்தினார்!

அந்த இரு தமிழ் மேதைகளுக்கும் கவிஞர் தாகூர் கைகூப்பி அவரது வங்காள மொழியிலே வணக்கம் உட்காரும்படி சொன்னார். கவிஞரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் கெளவுரவமாக அமர்ந்து விட்டார்கள்.

நோபல் பரிசு பெற்ற தாகூரைப் பாராட்டி ‘ஆங்கிலத்திலே எழுத்ப்பட்ட பாமாலை வாழ்த்திதழ்கள் இரண்டை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.