பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : சுகதேவ் மாளிகையின் ஒரு பகுதி. உட்புறம். சிர்கதே : (கருணாலயரிடம்) அச்சம் வேண்டாம். நண்பரே! அத்தனை சூழ்ச்சியும் அடக்கப்படும், இழந்த கெளரவம் மீட்கப்படும்! (கனிமொழி மலர்த்தட்டுடன் வர) G5 : கனிமொழி, என்னம்மா இது? கனி : அண்ணா, அவர்கள் எங்கே? சுகதே அவர்கள் என்றால் யாரம்மா? கனி : அவர்கள்தான். சாந்தியும். சுகதே : ஓகோ இப்பொழுதுதான் புரிந்தது. அவர்கள் என்பதற்கு அர்த்தம். கனி என்ன அண்ணா. அவர்களை விருந்துக்கு அழைக்க நீங்கள் யாரையும் அனுப்பவில்லையா? சுகதே : ஆமாம், அவர்களை வரச்சொல்லிவிட்டு இப்படி மாலையோடு நிற்கிறாயே, மலரும் மாலையுந்தான் அவர்களுக்கு உணவா? கனி : அண்ணா, விருந்துக்கேற்ற உணவெல்லாம் சமைத்து விட்டேன். சுகதே : அடாடா கனிமொழி, இன்றைக்கு நீயா சமைத்தாய்? கனி : ஆமாம், அண்ணா! சுகதே : அப்படியானால் மணிவண்ணரை வேறு ஒரு நாளைக்குத்தான் சாப்பிட வரச்சொல்ல வேண்டும்.