பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கவியின் கனவு கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரைக்குக் கலைஞானம் தெரியாதம்மா - அது காலால் உதைக்குமம்மா அடையாளம் தெரியாது அறிவும் புரியாது ஆண்டிக் கடிமையம்மா - இன்பம் வேண்டிக்கிடக்குதம்மா - குழி தோண்டிக் கனைக்குதம்மா. வெள்ளைமயில் ஆடும்பிள்ளைக்குயில் பாடும் கிள்ளையும் பேசுதம்மா - என்உள்ளம் குளிருமம்மா அந்தப் பிள்ளைகளும் இல்லை பேருலகம் இல்லை பித்தர் பித்தர் உலகம் அம்மா - இதுமிக எத்தர் உலகம் அம்மா. பேசுகிறார்: ஆம், வெள்ளை மயில் ஆடும். பச்சை மயில் ஊர்வ : கவி அசையும். நீலமயில் ஒடும். குயில் பாடும், கிளி பேசும் கருடன் - கழுகு முதலானவை சந்தோஷம் தாங்காது 'கை' என்று சப்தமிடும். சாந்தி. அந்த கனவு என்னும் நாடகம்.? (பவமாகச் சிரித்து, ஆ. நாடகம். நாடகம். நாட்டின் அகம். நாடகம் நாடகமே உலகம். நாளை நடப்பதை யாரறிவார். ஒரு நாடகமே உலகம் ஆ. வாணி. சாந்தி. மணிவண்ணா. (என்று கூறி கவிஞர் மயங்கிவி, மெதுவாக அரசி ஊர்வசி சிறையிலிருந்து போக முயற்சிக்க மேடையின் ஒளி மங்குகிறது (কণ্ঠে is ৫৫থ}