பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சுகதே கனி சுகதே : கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கவியின் கனவு துடைத்து அண்ணா, உண்மை அன்புக்கு உலகில் இடமே இல்லையா, அண்ணா? கொடிய உலகத்தைக் குழந்தைகள் போல நம்பி மோசம் போனது நமது குற்றம் அம்மா. நீ வருந்தாதே. நீ அவர்கள்மீது வைத்த அன்பை மீட்டுக் கொள்ளும் சக்தியை இறைவன் உனக்குத் தருவானாக! ஆம் அழியும் மனிதர்கள்மீது வைக்கும் ஆசையை ஆண்டவன்மீது வைத்தாலாவது ஆத்மசாந்திக்கு வழி உண்டண்ணா. கலங்காதே. கனிமொழி நிராசை ஏற்படும் போது தானம்மா நாம் துணிவை விடாமல் வளர்க்க வேண்டும். (போசித்து, மணிவண்ணர் ஒருகாலும் இந்த அடாத பழிக்குக் காரணமாயிருக்க மாட்டா ரண்ணா! யார் காரணமாயிருந்தாலென்ன? அரச குடும்பத் தின் சூழ்ச்சிக்கு இவனையும் ஒரு கருவியாக்கிக் கொண்டார்களே! எல்லாம் அந்த ராணியம்மையின் சூழ்ச்சிகள்! அவளுக்கும் தலைவன் ஒருவனிருக்கிறானம்மா. அரசர் வீரசிம்மரா? அவர் ஒரு பொம்மை! ஆடும்பாவை! பாவம்! ஆட்டுவிப்பவன் சர்வாதிகாரி. அம்முரடன் விரைவில் என் வாளுக்கு இரையாவது திண்ணம். அரண்மனையின் கோபம் நமக்கெதற்கண்ணா? மகா கொடியவர்கள். கனிமொழி பாம்புகூடக் கொடியதுதான். அதற் காகப் பருந்து பறக்காமலிருக்க முடியுமா?