இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடம் : மணிவண்ணன் மாளிகை
காலம் : இரவு
(மணிவண்ணன் கலக்கத்துடன் உலவுகிறான்)
βιρε" : (வந்து உங்கள் எண்ணப்படிதான் கலியாணம் நடந்துவிட்டதே. இனியும் என்னைப் பார்க்க என்ன வெட்கம் உங்களுக்கு?
மணி : பெண்ணே உன்னைப் பார்க்கப் பரிதாபமா
யிருக்கிறது.
மேன : சரி. வாருங்கள், துணைவரே! என் இளமை.
மணி : சீ. நானல்ல உன் கணவன். சர்வாதிகாரியின் சதி
நீ என் தங்கை சாந்தி எங்கே? மேன : சாந்தி என் அறையில் இருக்கிறாள். மணி : கனிமொழி எந்தச் சிறையிலிருக்கிறாள்?
மேன : நானிருக்கையில் அவளை நினைப்பது பாவ
மல்லவா, நாதா?
மணி : சீ குடிவெறியில் உளறாதே கண்களைப் பார்.
மேன : கண்ணைப்பற்றிக் கவலையென்ன! ஆட்டின் கண்கள் அழகாயில்லை என்பதற்காக, அதை உண்ணாமலா விட்டுவிடுகிறார்கள்? (நெருங்குகிறாள். அவன் தள்ளுகிறான்)
மன : ஒகோ அரசிளங்குமரியாகிய நான் இவ்வாறு
நெருங்கி வந்தும் அலட்சியமா செய்கிறீர்!